அம்மாவின் சிறு குறிப்புக்கள்.. மேலும்..

  • துளசியை மென்று ஒரு பிடி தின்றால் தேள்கொட்டிய விடம் இறங்கிவிடும். கொட்டிய இடத்தில் துளசிச்சாறு தேய்க்கலாம்.

  • உடம்பு அரிப்பு ஏற்பட்டு உடம்பு பூராகவும் திட்டு திட்டாக வந்தால், கொஞ்சம் புளித்த கெட்டி மோரில் 5, 6 செம்பருத்திப் பூக்களை பறித்துக் கரைத்து அரிக்கும் இடங்களில் தேய்த்தால் மாறிவிடும்.

  • வீட்டிலுள்ள தொட்டிச்செடிகளும் குரோட்டன்களும் ஒளி மங்கி இலைகள் சோர்வடைந்து மங்கலாய் இருந்தால், அவற்றின் மேல் கால் தேக்கரண்டி எப்சம் உப்பை தண்ணீரில் கலந்து தெளியுங்கள். பச்சைப்பசேல் என்றாகிவிடும்.

  • சிறிது சர்க்கரையுடன் 15பூச்சி உருண்டைகளை பொடிசெய்து தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, சிறிது மண்ணெய் ஊற்றி சிறிய துணியில் தோய்த்து பூச்சிகள் உள்ள இடத்தில் வைக்க, அவை வந்து இறந்துவிடும்.

  • முளைவந்த பயரை மூன்று மாதம் காலையில் தினமும் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்க வாய்ப்புண்டு. அம்மூன்று மாதமும் கோப்பி, தேனீர் அருந்துவதை தடுக்கலாம்.

  • தேமலுக்கு இலுப்பை இலையை வேகவைத்து அரைத்துக் குளிக்கலாம்.

  • கல்யாணபந்தியில் சாப்பாட்டிற்கு ஒரே ஈக்களாக படையெடுக்கின்றனவா? கவலைப்படாதீர்கள் ஒரு கொத்து கறிவேப்பிலையை கசக்கி பந்தி நடுவே வையுங்கள் அப்புறம் அந்தப்பக்கம் ஈ தலையே காட்டாது.

  • மருதாணி இலையை அரைத்து அந்த விழுதோடு சிறிது அமிர்தாஞ்சனத்தையும் கலந்து இட்டுக்கொண்டால் செக்கச்செவேலென்று வரும்.