அம்மாவின் சிறு குறிப்புக்கள்.. மேலும்..

  • பிரசவித்த பெண்ணிற்கு கர்ப்பவலி இருந்தால் அடி வயிற்றில் தேன் தடவுவது வலியை நீக்கும்.

  • மருதாணி இலையை அரைத்து அந்த விழுதோடு சிறிது அமிர்தாஞ்சனத்தையும் கலந்து இட்டுக்கொண்டால் செக்கச்செவேலென்று வரும்.

  • தோலில் முள்முள்ளாக வரும் வறட்டு சொறிக்கு எலுமிச்சம்பழச் சாறு தேய்த்துக் குளிக்கலாம்.

  • பவழமல்லி பூக்களை கசக்கிப்பிழிந்து அந்தச்சாற்றை வெயிலில் காயவைத்தால் பவழமல்லி சாந்து கிடைக்கும்.

  • முகப்பருவிற்கு சீரகம் கருஞ்சீரகம் சம எடை எடுத்து எருமைப்பால் விட்டு அரைத்துப்போடலாம்.

  • தேமலுக்கு இலுப்பை இலையை வேகவைத்து அரைத்துக் குளிக்கலாம்.

  • முளைவந்த பயரை மூன்று மாதம் காலையில் தினமும் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்க வாய்ப்புண்டு. அம்மூன்று மாதமும் கோப்பி, தேனீர் அருந்துவதை தடுக்கலாம்.

  • முகப்பருவை நீக்க சிறிதளவு சாதிக்காயை இழைத்து தினமும் பருக்களின் மீது தடவி வர, பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.