Tuesday, May 12, 2020

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூனியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான். அதற்கு மொழியில்லை. இளையராஜாவின் How to Name it ல் வரும் வயலின் இசை கமழ்ந்து வரும் பொழுது இதயம் கனக்கும், கனமென்றால் அப்படியொரு கனம் இருக்கும். இதயம் அறுந்து விழுந்துவிடுமோ என்கிற ஐயம் மனதில் எழுமளவுக்கு இதயம் கனக்கும். கண்களில் கண்ணீர் வர மறுக்கும். கண்ணீர் வர மனதில்  ஓரளவுக்கு
சோகமிருந்தால் போதும், கண்ணீர் வர மறுக்கும் சோகத்தின் எல்லையை இன்மை காட்டும். இன்மையின் உணர்வுக்கு அளவு கோல் வைத்து அளக்கும் அளவிற்கு யாருக்கு துணிவும் இல்லை, ஏனெனில் அந்த சோகத்தை ஏற்கும் மனநிலையை யாரும் வேண்டுவதில்லை. இன்மை, அதுவாக நம்முள் முள் வைத்து தைத்துவிட்டுப் போகும், இல்லை, தைத்துக்கொண்டே இருக்கும்.


டு இரவில் எழும் பொழுதே மனதின் வலி உணரலோடு எழுந்தால் பிறகு அந்த வலி நாள் முழுக்க இருக்கும், கண்கள் மூடியிருக்கும், உறங்க கண்கள் இரண்டும் கெஞ்சும். கண்கள் கெஞ்சி பார்க்கும், பிறகு இதயம் கொண்ட வலியை கண்களும் ஏற்கப் பழகிக்கொள்ளும். விழலுக்கு இறைத்த நீரைப்போல  கிஞ்சித்தும் உபயோகமில்லாத கண்களின் கெஞ்சலை சற்றும் பொருட்படுத்தாது இதயம் தன்னிஷ்டப்படி வலியை உணர்ந்துகொண்டே இருக்கும். அந்த வலி இரவு வரை தொடரும், சில நாட்கள் இரவு கடக்கும், மீண்டும் கண்கள் கெஞ்சும், ஆனால் இதயம் மிரட்டி கண்களை அடக்கிவிடும்.

வாழ்க்கையில் நாம் கடக்கும் இரவுகளின் தூரத்தை யாரும் அளந்து விட்டிருப்பதில்லை, தூங்கிக் கடக்கிறோம், அதனால் அதன் நீளம், வண்ணம் அறியாமலே இருப்போம். ஓர் இரவு முழுக்க இதயம் அதன் வலியை உணர்ந்துகொண்டிருக்கும் பொழுது, இமை மூடிய கண்கள் தூங்காமல் இருக்கையில், இரவின் நீளம் தெரியும், இரவு ஏன் அமைதியில்லாமல் இருக்கிறது என எண்ணத் தோன்றும், இரவின் வண்ணம் தெரியும், அதன் இரைச்சல் தெரியும், இரவின் ஓலமும் நமக்குக் கேட்கும்.


மீண்டும் மீண்டும் ஒரே நினைவினில் வாழ்ந்து பழக்கப்பட்ட வாழ்வில், திடீரென அதனை மாற்ற எத்தனிக்கும் தருணங்களில், தலை அறுபட்ட ஆட்டின் கதறல் போன்று ஓர் ஓலம் எழும், அந்த ஓலம், அதீத இரைச்சல் கொண்டது, நம்மைச் சுற்றிலும் பேரமைதி இருக்கும், ஆனால் மனத்திற்கு புயலடித்துக்கொண்டிருக்கும்.  அறிவு இதனையெல்லாம் புரிந்துகொண்டிருக்கும், ஆனால் உணர்ந்து கொண்டிருக்காது.




யார் சொன்னது இன்மை அமைதியானது என்று? அதன் பேரிரைச்சலில், உடலின் அனைத்து உறுப்புகளும் அந்த இரைச்சலை உற்று நோக்கும். இன்மைக்கான காரணத்தை மனம் அறியும், மனம் மட்டுமே அறியும், என்னைச் சுற்றி வரும் குதூகலத்தில் மனம் லயிப்பதில்லை, அனைவரும் சிரிக்கும்பொழுது நானும் சிரித்து வைப்பேன், அதனைப் பார்த்த மனம் சிரிக்கும், அது எக்காளச் சிரிப்பென்று உதடும் அறியும். மீண்டும் மீண்டும் வரும் இரவு வரும், மீண்டும் மீண்டும் வலி வரும், மீண்டும் மீண்டும் கண்கள் கெஞ்சும், இறுதியில் இதயத்தின் வலியே வெல்லும்.. அது இன்மை தரும் வலி..

Wednesday, March 11, 2020

அவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே

மதியம் 2 மணி இருக்கும், இது 18 வது முறையாக அழைக்கிறேன். நைட் ஷிப்ட் முடிந்து வந்து தூங்கியிருப்பான் ராஜ். அவனைத்தான் மொபைலில் எழுப்பிக்கொண்டிருந்தேன். "ஹலோ" என்று கர கரத்த குரலில் சொன்னான் ராஜ்.


"என்னடா"

"மச்சான், நவீனாவை மஹாப்ஸ்ல ஹோட்டல் வாசலில் பார்த்தேன்டா. எவன் கூடவோ சிரிச்சு பேசிட்டு இருந்தாங்கடா"

"ஹ்ம்ம் தெரியும்டா, ப்ரேம் கூடதான் போயிருப்பா"

The Curious Case of Falling Phone Talk

"என்ன மச்சான் இவ்வளவு அசால்ட்டா சொல்றே? அவ உன் லவ்வர்டா. மஹாப்ஸ்ல அதுவும் அங்கே வந்து சாப்பிடறளவுக்கு இங்கே என்னடா வேலை?"

"சொல்லிட்டுதான் போனாடா. அவன் அவளோட பிரண்ட்தான் மச்சான். விடு, சாயங்காலம் வந்துருவா"

"டேய், உனக்கு பதட்டமாவே இல்லையாடா? லிவிங் டுகெதர்ல இருக்கிற அவ எப்படிடா இன்னொருத்தன் கூட போலாம். விடு தப்பே செய்யலைன்னு வெச்சிக்குவோம், அவன் கூட பைக்ல வந்திருக்கா. எப்படிடா அலவ் பண்றே? டூ யூ லவ் ஹர்?"

"கண்டிப்பாடா, அவளை சின்சியரா லவ் பண்றேன். அதுல எந்த சந்தேகமும் இல்லை. நாந்தான் அவளை நல்லா பார்த்துக்கிறேனே.. அப்புறம் என்ன?"

"மச்சான். அவ இன்னொருத்தான் கூட பழகுறது உனக்கு பொஸசிவ்வா இல்லையா? "

"இருக்குடா, அவளை நான் லவ் பண்றேன். அவ என்ன செஞ்சாலும் அவ என்னோட லவ்வர் மச்சான். அவதான் பிரண்டுன்னு சொல்லிட்டு போனா. அப்படியே தப்பு நடந்தாலும் அவளுக்கு தெரியாமலா நடக்கப் போகுது? அவளை நான் நம்புறேன். "

அவளும் லவ் பண்றாதானே?

தெரியல, எப்பவாச்சும் சொல்வாடா? ஆனா அவ அன்புக்காரி மச்சான். என்னோட அத்தனை சண்டையையும் ஒரு நொடியில அவ அன்பால அடக்கிடுவா.அவ அன்பு போதாதா மச்சான். சொல்லு? அதுதாண்டா எனக்கு வேனும். அதை அவ தரா. திகட்ட திகட்ட தராடா. ஒன்னு தெரியுமா மச்சான். எவ்வளவு சண்டை வந்தாலும் என்னை விட மாட்டாடா. நான் வேனும்னு ஒத்த கால்ல நிப்பாடா. அவளுக்கு நான் வேணும்ங்கிறதுல ரொம்ப கண்டிப்பா இருப்பாடா. அது போதும் மச்சான் எனக்கு.

மச்சான் இருந்தாலும், இன்னொருத்தன் கூட..

இருக்கட்டும்டா, அவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே, ஆனா என்கிட்டதானே வரா. என்னை விட்டு போகலையே. அவ சந்தோசம் அதுவோ அதை அவ செய்யட்டும்டா.. என்னவா இருந்தாலும்..

"உன்னை... விடு மச்சான்.." போனை கடுப்புல கட் செய்தேன்.


நவீனாவை அழைத்தான் ராஜ் "பேபி, ராத்திரிக்கு என்ன வேணும், சமைக்கப் போறேன்."

"செல்லம்டா நீயு, நீ எது செஞ்சாலும் ஓகே பேபி. ம்ம்ம்மா ", என்று போனுக்கு முத்தமிட்டாள் நவீனா

Thursday, January 23, 2020

WhatsApp DP - சிறுகதை

காலை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பார்ட்மெண்டில், வெவ்வேறு ப்ளாக்கில் வசிப்பவர்கள், ஒரே அலுவலகத்தில் பணி புரிபவர்கள், முப்பதுகளின் மத்தியில் இருப்பவர்கள். இருவருக்கும் திருமணமாகி 2 பையன்கள் உண்டு. அடிக்கடி குடும்ப சகிதமாக சந்தித்துக்கொள்வோம். பையன்கள் எல்லாம் ஒரே வயதாக இருந்த காரணத்தினால், Potluck அடிக்கடி நடக்கும். வாரயிறுதியும், தீபாவளி, பொங்கல் மாதிரியான கொண்டாட்டங்கள் எல்லாம் இப்படியே ஓடும்.



சுந்தரி WhatsApp DPயை  அடிக்கடி மாற்றுவது வழக்கமாக வைத்திருந்தாள். புதுப் புடவை உடுத்தினால் அதைப் படமெடுத்து அதை WhatsApp DPயாக சில நாட்கள் வைத்திருப்பாள், சில நாட்கள் பூக்கள் மட்டும் வைத்திருப்பாள். இப்படியாக இருந்த அவளது WhatsApp DPக்கள், ஒரு மாதத்திற்கு முன்பு வேறு
பரிமாணம் எடுக்க ஆரம்பித்தது. Private Chatல் குறைந்த பட்சம் 30 நிமிடங்ளாக தினமும் எதையாவது Chat செய்து கொள்வோம். அப்படித்தான் WhatsApp DPயை கவனிக்க ஆரம்பித்தேன். திடீரென சோகமாக இருக்கும் குழந்தை படம் வைத்திருப்பாள். அன்று அவள் சோகமாகத்தான் இருப்பாள். ஒரு நாள் சம்பந்தமே இல்லாமல் முள் படம் வைத்திருப்பாள், ஒரு நாள் கல்யாண மோதிர படம் வைத்திருப்பாள். ஆனால் அன்று அவளது கல்யாண நாளாக இருக்காது. ஒரு நாள் புன்னகை மன்னன் ரேவதி படம் வைத்திருந்தாள், ஒரு நாள் காதல் கோட்டை தேவையாணி படம் வைத்திருந்தாள்.


ப்படியாக WhatsApp DPயிலேயே சுவாரஸ்யம் கூட்டிக்கொண்டே சென்றாள். அவள் WhatsApp DP மூலம் எழுதும் கதை மீது பித்துப் பிடித்துப்போனது எனக்கு..நேரடியாக ஒரு நாள் அவளிடம் கேட்டே விட்டேன். அதற்கு சுந்தரியோ "போடீ, நானே வேலை பொழப்பு இல்லாம மாத்திட்டு இருக்கேன், நீ பெருசா கேட்க வந்துட்டே, போய் வேலையைப் பாரு" என்று நகர்ந்து விட்டாள்.  ஆனாலும் எனக்கு என்னமோ ஒரு எண்ணம். அதை குரூர புத்தி என்றும் சொல்லலாம். ஒரு நாள் அந்த குரூர புத்தி தோன்றியது. அவளது மொபைலைத் திருடி WhatsApp படித்தால் என்ன என்று தோன்றியது. அன்று முழுவதும் எனக்கு வேலையே ஓடவில்லை. அவளது Lock Patternஐ கண்டுபிடிப்பது முதல் வேலையாக இருந்தது,  ஒரு நாள் அவளது சீட்டிற்கு பின்னாடி உட்கார்ந்தேன். என்ன chat செய்கிறாள் என்று எட்டி பார்த்துக்கொண்டே வந்தேன். ஒரு முறை Unlock செய்யும் பொழுது கண்டு பிடித்துவிட்டேன். சரி, இப்போ அவளது மொபைல் மட்டும் கிடைத்தால் போதும், அவளது WhatsApp எல்லாம் படித்துவிடலாம். என்னவாகவோ இருக்கட்டும், ஆனால் படம் மாற்றுவது மட்டும் என்னவென்று தெரிந்துகொண்டால் போதும்.

ப்படியாகவே இரு வாரம் சென்றது. சனிக்கிழமை காலை ஒரு நாள் வீட்டிற்கு வந்தாள், எதையோ பேசிக்கொண்டிருந்தவள், அவளது மொபைலை ஹாலிலிருந்த டேபிள் மேல் வைத்துவிட்டு சமையலறைக்கு வந்தாள். இதுதான் சமயம் என்று அவள் சமையல் அறையில் இருக்கையிலேயே வெளிவே வந்து சட்டென்று அவளது மொபைலை ஆஃப் செய்து சோபாவின் அடியில் சொருகி வைத்துவிட்டு பிறகு சமையலறைக்குச் சென்றேன்.மிகவும் படபடப்பாக இருந்தது.  படபடப்பை காட்டிக்கொள்ளாமலே வழக்கம் போல பேச ஆரம்பித்தேன்..
"சரி, நான் கிளம்புறேன். துவைக்கனும், அப்புறமா வீட்டுக்கு வா" என்று சொல்லிவிட்டு ஹாலுக்கு வந்தவள், "என் ஃபோனை பார்த்தியா? " என்று கேட்டாள்.

"நீ ஃபோனை கொண்டு வந்தியா? நான் பார்க்கவே இல்லையே, வீட்டுல வெச்சிட்டு வந்திருப்பே.. எதுக்கும் வீட்டுக்குப் போய் பார்த்துட்டு சொல்லு" என்றேன்.

டபடப்பாக நடந்து போனாள் சுந்தரி. நானும் படபடப்பாக ஃபோனை எடுத்து அவளது On செய்து, pattern lock போட்டு, AeroPlane மோடை ஆன் செய்தேன். WhatsApp போனேன். நேற்று அவள் இதயம் ஹீரா படம் வைத்திருந்தாள். அவளது Chat முழுவதையும் Scroll செய்ய ஆரம்பித்தேன். இதயம் முரளி படம் பார்த்ததும் சட்டென அந்த Chatஐ Open செய்தேன்.எனக்கோ விரல்கள் எல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. வாசலுக்கு வந்து வராண்டாவை பார்த்தேன், அநேகமாக சுந்தரி வீட்டில் ஃபோனைத் தேடிக்கொண்டிருக்கலாம். இரண்டும் நிமிடத்தில் படிக்க முடியுமா எனப் பார்த்தேன். பெரிய பெரிய Chatகளாக இருந்தது. வராண்டாவில்  திரும்பி என் அப்பார்ட்மெண்டுக்கு ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தாள் சுந்தரி. "போச்சு.. போச்சு.. மாட்டிக்கப் போறோம்" என வாசற் கதவைச் சாத்தி பூட்டிவிட்டு வேகமாக சமையலறைக்கு வந்து அந்த Chatஐ scroll செய்து செய்து Photoக்கள் எடுத்தேன்.  30 விநாடிகளில் சுந்தரி வந்துவிடுவாள். அந்த Phone numberஐயும் photo எடுத்தேன்.  காலிங் பெல் அடித்தது. சட்டென அவளது ஃபோனை ஆஃப் செய்து ஹாலின் டிவிக்கு முன்பு வைத்தேன். கதவைத் திறந்தேன்.

'என்னாச்சு கிடைச்சதா?'

"இல்லை, இங்கேதான் கொண்டு வந்தேன், ஞாபகமிருக்கு, இப்போ ஃபோன் பண்ணினால் Switched Off அப்படின்னு வருது"

"அப்படியா இரு" என்று சமையலறைக்கு வந்து எனது ஃபோனை எடுத்து அவளது எண்ணுக்கு அழைத்தேன்,  Switched Off என்று வந்தது. வராதா பின்னே, நாந்தானே ஆஃப் செய்து வைத்தேன்..

'ஆமா எங்கே வெச்சே, ஞாபகமிருக்கா?'

'ஹால் சோஃபா டேபில் மேலதான் வெச்ச ஞாபகம்'

'வெச்சா எங்கே போயிரும்' என்று தேடுவதைப் போல நானும் பாவலா காட்ட ஆரம்பிச்சேன்.

தேடிக்கொண்டே வந்தவள் டிவிக்கு முன்னாடி இருந்த ஃபோனைப் பார்த்ததும் . "அட இங்க பாரு, டிவிக்கு முன்னாடி வெச்சிருக்கேன். பேட்டரி காலி போல, அதான்  Switched Off அப்படின்னு வந்திருக்கு. 10 நிமிசம், கலக்கிருச்சு போ" என்று சொல்லி கிளம்பியவளை வழி அனுப்பி வைத்துவிட்டு வந்து அந்த போட்டோக்களை பார்த்தேன்.

காதல் காதல்  காதல் .. அத்தனை Messageகளிலும் காதல் சொட்ட சொட்ட பேசியிருக்கிறார்கள். அடிப்பாவி சுந்தரி நீயா இப்படி? இத்தனைக் காதலா உனக்குள்ள இருக்கு? காதல்காரிடீ என்று மனசுக்குள் நினைத்தேன். இப்படியெல்லாம் கூட சுந்தரிக்கு பேச வருமா என ஆச்சர்யப்பட்டேன். சரி, யாரு இவளுடைய ஆள் என்று பார்த்தேன். John USA என்று save செய்து வைத்திருந்தாள். ஆனால் +91 என்று ஆரம்பித்த எண் அது. அடிப்பாவி என்னா தில்லாலங்கடிடீ என்று நினைத்து அந்த எண்ணை என் ஃபோனில் அடித்து தேடினேன். "HUSBAND-OFFICE PHONE" என மின்னியது 

Wednesday, February 27, 2019

போர் .. ஆமாம் போர்

    என்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை தேநீர் இடத்தில் சந்தித்தேன். ஒரு தர்ம சங்கடமா நிலைமையில்தான் இருந்தோம். இரு நாட்டுக்கும் போர் நடக்கும் சமயத்தில் இப்படியொரு சந்திப்பு ஒரு விதமான நமுட்டுச் சிரிப்புடன் அவரை கடந்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் வழக்கம் போல, தோளில் தட்டி சகஜமாக பேச ஆரம்பித்தார்.

    அவரைப் பற்றி, 1990களில் அமெரிக்க வந்த அவர், அமெரிக்க பிரஜை ஆகி பல வருடங்கள் ஆயிற்று. அவருக்கு 3 மூன்று பெண்கள், அனைவரும் இங்கே பிறந்ததால் அமெரிக்க பிரஜைகள்தான். அமெரிக்க வெள்ளை நிறப்பெண்களும் அவர்களுக்கும் சிறிது வித்தியாசமும் இல்லாதவாறுதான் இருப்பார்கள்.  இந்திய அமெரிக்க மக்களைப் போலதான் அவருக்கும் பாக் மக்களுடனான நெருக்கமும் இருக்கும். ஹலால் கடைகளில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார். கிரிக்கெட் பார்ப்பார், அவரது பெற்றோரை, சகோதர குடும்பங்களைப் பார்த்து வர இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பாக் போய் வருவார்.

 ன்று காலை அவரிடம் பேசியதிலிருந்து ஒரு சில :  பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். (அவர் பிறந்து வளர்ந்த காலத்தில் நல்ல கட்சியாக இருந்ததாம்). இப்போது அவர் பாகிஸ்தானில் இருந்தால் அந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பாராம். பாகிஸ்தானில் இரு கட்சிகள்தான் பிரதானம்  நம்ம திமுக, அதிமுக மாதிரி வெச்சிக்குவோம். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி, பல கட்சிகள் இருந்தாலும் இவை இரண்டும்தான் கடந்த காலத்தில் மாற்றி மாற்றி ஆட்சி அமைத்துக்கொண்டவை. 1996 க்குப் பிறகான இம்ரான் கானின் அரசியல்  பிரவேசம் பாகிஸ்தான் மக்களிடம் நிறைய மன மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறதாம்.  கட்சி ஆரம்பித்து 22 வருடங்கள் கழித்தே அவர் ஆட்சியில் அமர்ந்தார், அதுவும் கூட்டணி ஆட்சிதான் எனினும் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறார். பாகிஸ்தான் இளைஞர்கள் அனைவரும் இம்ரான் கட்சியின் மீது அதிகம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

வர் ஆட்சியேற்ற பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்ததாகச் சொல்கிறார். இம்ரானுக்கு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் POK அதிகம் நாட்டமில்லை, காரணம், அதற்காக பாகிஸ்தான் செலவழிக்கும் பணத்தை வேறு நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம், அதுவுமில்லாமல் தேவையில்லாத பதட்டம் வேறு. இன்னொன்றையும் அவர் சொன்னது : பாகிஸ்தான் ஊடகங்கள் சமீப காலமாக உண்மைகளைச் சொல்லி வருகிறார்களாம். முன்னெல்லாம் ஆட்சி பீடத்தில் சொல்லும் செய்திகள்தான் வருமாம்.

    ந்தப் பிரச்சினை பற்றி அவர் சொன்னதை அப்படியே தருகிறேன். இன்றைய நிலையில் அமைதியை விரும்பும் இம்ரான் இந்தியாவிடம் போரிடுவதை விரும்பவில்லை. அவரது பார்வையில் இந்திய அரசாங்கம் வீணாக வம்பு வளர்கிறது. அதற்குக் காரணம் அவர்களது தேர்தல்களம். இன்றைய இந்திய வீரரை சிறையெடுத்ததும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கத்தான், ஆனால் இன்றைய இந்திய அரசாங்கம் போரையே விரும்புவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த இரண்டு நாட்களாக சொல்லிவருகிறார்களாம். தேர்தல், வாக்கு என்று இரண்டுமே பாகிஸ்தானின் இன்றைய தேவையில்லை. அதனால இதில் அரசியல் செய்ய இம்ரான் கானுக்கும் விருப்பமில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு ஐ. நா சபையை நாடலாம் என்றும் நினைக்கிறார். அவரைப் பொறுத்தவரை காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை. அரசியலுக்காகவும் வாக்குக்களுக்காகவும் மக்களைத் தூண்டிவிட்டதன் விளைவை இன்று காஷ்மீரத்து மக்கள்தான் அனுபவித்து வருகிறார்கள், அதாவது இந்திய மக்கள். இதைச் சொல்லி முடிக்கும் போது அவர் உண்மையாகவே வருத்தப்பட்டதாகத்தான் உணர்கிறேன். ஒன்று மட்டும் நிச்சயம் முற்காலத்தில் அரசியலுக்காகவும், வாக்குகளுக்காகவும் காஷ்மீரத்தை வைத்து மதம் பூசி நன்றாக கொளுத்திருக்கிறார்கள் பாகிஸ்தானின் இரு கட்சியினரும். இன்று அதை இம்ரான் விரும்பவில்லை என்பது மட்டும் நிச்சயம். ஆனாலும் பாகிஸ்தான் சமூக ஊடகளிலும் நிறை வதந்திகளையும், பொய் படங்களையும் பரப்பி வருகிறதாகவும் வருத்தப்பட்ட்டார்.

    தில் என் பார்வை என்னவென்று கேட்டார் "எனக்கு முழு உண்மையறியவே முடியவில்லை. காரணம் எந்த ஊடகமும் சரியான தகவல் தரவில்லை. இதில் சமூக ஊடகங்களில் ஆளும் கட்சி ஆதரவாளர்களின் தாண்டவம் வேறு சந்தேகத்தை நிச்சயமாக்கியது. நேற்று வரை கொண்டாடிய ஊடகங்கள், இன்று BBC, Reuters, Aljazeera போன்ற ஊடகங்கள் இந்திய இராணுவத்தாக்குதலில் எந்த சேதாரமும் என்று சொன்னதும் நேற்று சொன்ன சேதியை மழுப்பலாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள், NDTVயோ, மறைமுகமாக ஏதோ நடக்கிறது, எதையும் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை பின்வாங்க ஆரம்பித்து விட்டது. இம்ரானின் இன்றைய மாலை நேரத்து (PKT) பேட்டியும் நண்பர் சொன்னதை நிஜமென நம்ப வைக்கிறது. கேப்டன், அர்ஜுன் காலத்தில் (1990களில்) சொன்னது எல்லாம் எவ்வளவு நிஜமென்று நம்பியிருந்தாலும் கால மாற்றதில் யாரும் போரை விரும்புவதில்லை, அதிலும் செலவு பிடிக்கும் விசயம். அமெரிக்கா போரை விரும்புகிறதென்றால் அதில் வியாபாரம் இருக்கிறது. பாகிஸ்தான் போரை விரும்ப என்ன இருக்கிறது அரசியலும் வாக்குகளையும் தவிர. ஆனாலும் அவர்கள் போட்ட விதை முளைத்திருக்கிறது. அறுவடை செய்யும் காலத்தை இரு நாடுகளுமே எட்டிவிட்டார்கள். நல்லது நடக்கட்டும். மீட்டிங்கிற்கு நேரமாயிற்று, அப்புறமா பார்க்கலாம்" என்று சொல்லி கிளம்பிவிட்டேன்.


  அமெரிக்கா இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது. காரணம் இன்று  ட்ரம்ப் அவர்களும் வட கொரிய அதிபரும் சந்தித்துக்கொள்கிறார்கள், அதனால் இந்திய- பாகிஸ்தான் பிரச்சினை எல்லாம் கண்டுக்கொள்ள நேரமும் இருக்காது.

  
நாளையும் நாங்கள் இருவரும் இதே போல தேநீர் பருகுவோம், பேட்மிண்டன் விளையாடுவோம், நண்பர்களாத்தான் இருக்கப் போகிறோம்.

Monday, October 30, 2017

பேங்க் மேனேஜரும் நானும்

ஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன்.  மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மேலாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக  சொத்து பத்திரம் வேண்டும், என்னோட சம்பள சான்றிதழ்  வேண்டும், என் வீட்டுக்காரம்மா கையெழுத்து வேண்டும்,  அப்புறம் இருவரின் கியாரண்டி கையெழுத்து வேண்டும் என்று ஏகப்பட்ட வேண்டும்கள், அனைத்தையும் அளித்து அப்படி இப்படியாக பத்து நாட்களில் கடன் வந்து சேர்ந்தது. 

Image result for bank clip art


கடன் வாங்கிய தேதியிலிருந்து சரியாக வட்டியும் முதலுமாக கட்டிக் கொண்டே வந்தேன், இடையே ஒரு சேமிப்பு கணக்கையும் ஒன்றைத் துவக்கி சிறிய பணத்தை மாதா மாதம் சேர்க்க ஆரம்பித்தேன். கடன் சரியாக 3 வருடத்தில் முடிந்தது, கடன் கட்டி முடித்த சான்றிதழ் வாங்க வங்கிக்கு வரச் சொன்னார் மேலாளர்.


அன்று மேலாளரைச் சந்திக்க சிரமம் ஏதுமில்லை, வங்கியின் முழு வருட கணக்கு இந்த மாதம் இறுதியில் வருகிறது, ஏதாவது ஒரு பெரிய 
தொகையை எங்க வங்கியில் வைப்புத் தொகையாக போட்டால் 
உதவியாக இருக்கும் என்று நேரடியாகவே கேட்டார் மேலாளர்.

எனக்கும் இது தானே சந்தர்ப்பம், உடனே நானும் அவரிடம் 
"ஓ, தாரளமாக டெபாசிட் பண்ணுறேன். ஆனால் அதுக்கு  நீங்க உங்களோட அல்லது உங்க பாங்க்கோட சொத்துப் 
பத்திரம், உங்க சம்பள சர்டிபிகேட், உங்க வீட்டுக்காரம்மா  கையெழுத்து, அப்புறம் உங்களை விட பெரிய ஆபீசர்  ரெண்டுபேரோட கியாரண்டி கையெழுத்து எல்லாம் வேணும், இதெல்லாம் கொடுத்தா நான் உங்க பாங்க்கில டெபாசிட் போடறேன்" என்றேன்.

அவர் கேட்டதைத்தான் கேட்டேன், அதற்கு ஏன் என்னை முறைத்தார் என்று தெரியவில்லை.



நாங்க கேட்டால் மட்டும் கடன், 

நீங்க கேட்டா டெபாசிட்டா ??? என்னங்க..?? 
நம்பிக்கை, நாணயமுங்குறது 
ரெண்டு பக்கமும் இருக்கணுமில்லீங்களா...??? 

இந்த நாட்டில் அவருக்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா?


Img Courtesy http://clipartview.com

Tuesday, June 27, 2017

சிறுவாட்டுக்காசு

நான் சிறுவனாக இருக்கையில்
செலவுக்கு காசு வேண்டி அப்பாவிடம் நிற்கும்போதெல்லாம்
அப்பா தன் காக்கி அன்ட்ராயரில் துழாவுவார்
கிடைக்கும் சில்லறைகளை அப்படியே தந்துவிடுவார்.
மாசக் கடைசியென்றால் முறைத்துப் பார்ப்பார்
இல்லையென்பதாக நான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவர் தரும் சில்லறைகளுக்கு பீடி நாற்றமிருக்கும்,
சில நேரங்களில்  வெற்றிலை வாசமிருக்கும்,
சில நேரங்களில் புகையிலை வாசமிருக்கும்,
சில நேரங்களில் திருநீறுவாசமிருக்கும்,
சில நேரங்களில் மல்லிகைப் பூ வாசமிருக்கும்,
சில நேரங்களில் சாராயம் வாசமிருக்கும்,
சில நேரங்களில் அழுக்கு வாசமும் இருக்கும்.

அப்பா கொடுக்க மறுத்த பணத்திற்குப்பின் அம்மா தரும் பணத்திற்கு பல வித வாசனைகள் இருக்கும்


சில நேரங்களில்  பொட்டுக்கடலை வாசனையிருக்கும்,
சில நேரங்களில்  பச்சரிசி வாசனையிருக்கும்,
சில நேரங்களில்  வர மிளகாய் வாசனையிருக்கும்,
சில நேரங்களில்  கடலைப் பருப்பு வாசனையிருக்கும்,
சில நேரங்களில்  கொத்தமல்லி வாசனையிருக்கும்,


சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு பணத்திற்கான வாசனை இருப்பதில்லை,
சட சடவென ஏடிஎம் ஓடும் சத்தம் கேட்கும்,
பிறகு அதனை பர்சில் வைப்பதை வழக்கமாகிவிட்ட எனக்கு
அதன் வாசனையை மட்டும்
ஏனோ நுகரத் தோணுவதே இல்லை...


ஆனாலும்

அம்மா தரும் பணத்திற்கும் என்றுமே வாசனையுண்டு!

Saturday, May 6, 2017

காலப் போக்கில் அழிந்து போகும் சில

1980களில் ராதாகிரி அண்ணன் ஊரில தட்டச்சு பயிலகம் நடத்திவந்தவர். “அண்ணே இதைவிட்டு வேற வேலைக்குப் போய்டலாமே?” என்றால் “டேய், எது அழிஞ்சாலும் இந்தத் தொழில் அழியாதுடா, காயிதமும் எழுத்தும் இருக்கிற வரைக்கும் தட்டச்சு வேணும்” என்பார்,  பிடிவாதக்காரர். பிறகு சில வருடங்களில் அவரது பயிலகத்திற்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. 10 வருடங்கள் கழித்து திரும்ப ஊருக்குப்போனபோது, ராதாகிரி அண்ணன் Internet Browsing center/Xerox கடையாக மாற்றியிருந்தாரு. “என்ன அண்ணே ஆச்சு” என்றதற்கு, ”காலத்துக்கு ஏத்தாப்ல மாறினாத்தான் பொழைக்க முடியும்டா” என்றார்.

இன்றைய காலத்தில் நாம் புழங்கும், அவையெல்லாம் இல்லையென்றால் நம்மால் வாழ முடியாது என்று நாம் நினைக்கும் பல சாதனங்கள் அழிந்துவிடும். இதைச்சொன்னால் நாமும் ராதாகிரி அண்ணன் போல இல்லை என்று பிடிவாதம் பிடிப்போம்.

பிடிவாதம் பிடிக்காமல் யோசித்துப்பார்த்தால் பல விசயங்கள் நமது எண்ணத்திற்கு வரும், அதில் சிலவற்றை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன்.




தந்தி வழி தொடர்புகள்:
இப்போது இருக்கும் தந்திவழி  Cable தொலைக்காட்சி, தொலைபேசி இரண்டுமே அழிந்து போகும்.  இவையிரண்டுமே தந்தியில்லா முறையில் புழங்க ஆரம்பிக்கும். Dialup Modem, electronic typewriting Machine என்ற சாதனங்கள் எல்லாம் நமது கண் 

முன்னேமேயே, அதிக நாள் வாழாமல் போன சாதங்கள். அதுவும் இந்த 20 வருடங்களுக்குள்தான் கண்டோமே.. இல்லத்திரையரங்க சாதனங்கள் எல்லாம் கம்பியில்லா சாதனங்களாக மாற ஆரம்பித்தாயிற்று என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.




தொலைக்காட்சி:
தொலைக்காட்சி என்ற சாதனம் இருக்கும், தொலைக்காட்சி என்று நாம் இப்பொழுது கண்டு வரும் வழிமுறை மாறிப்போகும், நினைத்த நேரத்தில் முன்னகர்த்தியோ, பின்னகர்த்தியோ நிகழ்ச்சிகளை கண்டு களித்துக்கொள்ளலாம். செய்திகள், விளையாட்டு போன்ற சில நிகழ்வுகள்  

மட்டுமே நேரலையாக இருக்க வாய்ப்பிருக்கும்.


ஓட்டுநர்:
இப்போது நாம் ஊர்த்திகளை ஓட்டிவருகிறோம், விபத்துகள் ஏற்படுத்தி வருகிறோம். சில கவனக்குறைவுகளால் எத்துணை உயிரிழப்புகள்? வருங்காலத்தில் இவயெல்லாம் இருக்காது, தானியங்கி மகிழுந்துகள், ஊர்த்திகள், கனரக வாகனங்கள், புகைவண்டி வரும். இன்றைய பயன்பாட்டில்

இருக்கும் GPSஐ ஊர்த்திலேயே ஒரு கருவியாக்கி வைத்திருப்பார்கள். அதுவுமில்லாமல் Speedlimit என்பதையும் நினைவகத்தில் வைத்து ஊர்த்திகள் தயாரிக்கப்பட்டிருக்கும். இதனால சாலைவிபத்துகள் பெருமளவு குறைந்துவிடும். என்ன? நாம் அவசரமாக செல்லவேண்டும் ஏன்று

நம் அவசரத்திற்கு வண்டிகளை வேகமாக ஓட்டிப்போவது நடக்காது, அதன் வேகத்தில்தான் போகும், நமக்கு பொறுமையும் அவசியம். அதே நேரத்தில் சரியான நேரத்தில் கிளம்பும் பழக்கம் வந்துவிடும்.


கைக்கடிகாரம்:
இது இன்னும் 20 வருடத்துக்குள் கைக்கடிகாரம் காணாமல் போய்விடும் என் கணிப்பு. இந்தத் தலைமுறை பதின்ம வயதினரே கைக்கடிகாரங்களை விரும்புவதில்லை. ”நேரம் பார்க்க கணினி, அலைபேசி என்றிருக்கையில் அது எதற்கு தேவையில்லாமல்?” என்ற சொல்லாடல் இப்பொழுதே கேட்க ஆரம்பித்துவிட்டோமே. கைக்கடிகாரம் ஸ்மார்ட் வாட்ச் என்று மாறி இன்று மணி பார்க்க மட்டுமில்லாமல் உடல் நலத்திற்காக மாறிப்போயிருச்சு..



கணினி:
மடிக்கணினி,  மேசைக்கணினி என்பதெல்லாம் பயன்பாட்டில் இல்லாமல் போய்விடும். கைக்கணினி (Smartphones) மட்டுமே பயன்பாட்டிலிருக்கும். கைக்கணினிகளுக்கு, திரைகள் வேண்டுமானால் ஒரு இணைப்பாக இருக்கலாம், ஆனால் மூலமாக கைக்கணினிகள் மட்டுமே

இருக்கும்.  கொளுவுக்கணிமை(Virtual Computing) நமது வீடு வரைக்கும் வந்துவிட்டிருக்கும். வீட்டிலிருக்கும் கணினிகளும் செயல்படுவது வேறிடமாக இருக்கும், அதாவது மேகக்கணிமை(Cloud) பெருமளவுக்கு பயன்பாட்டிலிருக்கும். எந்தவிதமான தரவுகளும்(data)

நம்மிடமில்லாமல் வேறிடத்தில் பத்திரமாக இருக்கும்.



அலுவலகங்கள்:
அலுவலகத்திற்குச் சென்று வேலை பார்ப்பது என்பது அரிதாகிவிடும். அவசரப்படாதீர்கள், பணி செய்வதென்பது இருக்கும், அதற்காக அலுவலகத்திற்குத்தான் சென்று வரவேண்டுமென்பதில்லை. மேசைகளில் முடியும், மக்களைச் சந்திப்பது என்பதெல்லாம் எங்கிருந்தும் செய்யக்கூடிய

வேலைகளை. Video Conferencing, teleconferencing என்பதுதான் இன்று நாம் சொல்லும் Meetingன் அடுத்த கட்டமாக இருக்கும். அவையெல்லாம் வீட்டிலிருந்தே செய்து கொள்ளலாமே இதனால் அலுவலக இடம் மீதம், அலுவலக செலவுகளும் மீதம். வீட்டிலிருந்து

வேலை செய்வதென்பது பிரதானமாகிவிடும். இணையமில்லா வாழ்க்கை அரை வாழ்க்கை என்ற புதுமொழி கூட வரும்.


உணவு:
ஆமாம், உணவு என்பதும் கூட இல்லாமல் போகலாம். நம் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் குளிகைகளாகி வரும். சுவைகளைக்கூட நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம், வயிற்றில் சுரக்கும் அமிலத்தையும் கட்டுப்படுத்த ஏதாவது குளிகைகள் வரலாம். நம்முள்ளேயே மரபணு மாற்றங்கள் வரலாம். நேரமின்மை வயிற்று உபாதைகள் காரணமாக வரும் பிரச்சினைகள் அனைத்திற்கும் இந்தக் குளிகைகள் ஒரு அறுமருந்தாக இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துகளும் சரி விகிதத்தில் அனைத்து குழந்தைகளுக்கு குளிகைகள் மூலம் அளிக்கப்படும். ஏன் தண்ணீருக்குக்கூட மாற்றாக குளிகைகளே வரலாம். முடியாது என்பவர்கள் விண்வெளியில் பணியிலிருக்கும் சிலரின் வாழ்க்கை முறையை உதாரணமாகக் கொள்ளலாம்.


Tuesday, February 14, 2017

சமாதி

எங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம்!

எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்!!

அம்மா சொல்படி எங்கள் கட்சி வளர்ந்தது, அவரால் மட்டுமே இந்தக் கட்சியை நல்வழியில் கொண்டு செலுத்த முடிந்தது!!

அம்மா மறைந்த பிறகு இந்தக் கட்சி உடைந்து போயிருக்கும், சின்னம்மாவால்தான் கட்சி இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது!! 

அம்மாவின் சமாதியில் அனைவரின் மனசாட்சியும் பேசிக்கொண்டிருந்தது

அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது எம்.ஜி.ஆர் சமாதி!!!

Wednesday, July 20, 2016

கபாலி (முந்திரிக்கொட்டை) விமர்சனம்


படம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை
1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக்காமல் படம் வந்திருக்கிறது
2. வழக்கமாக ரஜினி படங்களில் சோகமான முடிவுகள் இருக்காது. இப்படம் அதில் விதி விலக்கு
3. ராதிகா ஆப்தேவிற்கு விருது கிடைக்கும்
4. பின்னணி இசை அமைத்ததிலேயே இந்தப் படம்தான் டாப்
5. தர்மதுரை, படையப்பாவிற்குப் பின் ரஜினி அவர்களுக்கு வயதான வேடத்தில் சிறப்பாக அமைந்த படம் இது
{படத்தின் செய்தித் துணுக்குகளை வைத்து பட்டி பார்த்து டிங்கரிங் செய்தவை, மேலே சொன்னவை உண்மையாகக் கூட இருக்கலாம்}

கதை: மலேசியாவில் கொத்தடிமைகளின் காலத்தில் போராடும் ரஜினிகாந்த் பெரிய டான்'ஆக மாறுகிறார். இதனால் அவருக்கு தமிழ் அல்லாத சில மக்களால் தொல்லை. எதிரிகளால் அவரது சில குடும்ப நபர்களின் உயிரிழப்புகளின் காரணமாக பொது வாழ்க்கையிலிருந்து மறைந்து வாழ்கிறார். சுமாராக அவரது 55 வயதில் மீண்டும் இருட்டுலகில் இருந்து வெளி வந்து அதே எதிரிகளை எதிர்க்க வேண்டி வருகிறது. மீண்டும் அவருடன் இணைகிறார்கள் பழைய நண்பர்கள். எதிரிகளை ரஜினிகாந்த் பழி வாங்கினாரா இல்லையா என்பதே இறுதிக்காட்சி.

Wednesday, May 11, 2016

Whatsapp விவாதங்கள்

அமெரிக்காவில் வாழ் மக்களின் whatsapp குழுக்களில் ஒன்று. தினமும் காலை எழுந்தததிலிருந்து இரவு படுக்க போகும் வரை பெரிய அடிதடி நடந்துகொண்டே இருக்கும். அதுவும் எதற்கு தெரியுமா? அடுத்து அம்மா ஆட்சி வேண்டுமா? ஐயா ஆட்சி வேண்டுமா? இல்லை கேப்டன் ஆட்சி வேண்டுமா என்று.  இதில் கொடுமை என்னவென்றால் இணையத்தை விட கேவலமா எதிர் கட்சியைத் திட்டிக்கொள்வதுதான், குழுவில் இருப்பவர்கள் அனைவருமே நண்பர்கள் என்பது வேறு விசயம். இதில் குறிப்பிடத்தக்க இன்னோர் விஷயம், குழுவில் இருக்கும் பாதிபேருக்கு இந்தியாவில வாக்குரிமை இல்லை, அதாவது அமெரிக்க வாசிகளாக மாறி பல ஆண்டுகள் ஆனவர்கள். மீதி பாதிப் பேர் வாக்களிக்க எக்காரணம் கொண்டும் போக மாட்டார்கள். இவர்கள்தான் தமிழகத்தின் அடுத்த ஆட்சியைப் பற்றி விவாதிப்பவர்கள்.

காலையில் அந்தக் குழுமம் போனவுடன் ஒன்றே ஒன்றுதான் தோன்றும், அதையும் நடிகர் கமல் அவர்கள் சொல்லி வைத்துவிட்டார் "போய் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கடா"

Wednesday, January 13, 2016

சல்லிக்கட்டு ஒரு சப்பைக்கட்டு

நாங்கள் க்ரிக்கெட், இறகுப் பந்து என்று விளையாடிக் கொண்டிருக்கையில் "விளையாட்டுன்னா அது  கபடி மாதிரி வீரமா இருக்கனும்டா, அதை விட்டுட்டு இது எல்லாம் விளையாட்டா?" என்று சொல்லுவான் என் நண்பன் செந்தில். இது கொங்கு வட்டாரம் என்பதால் கபடியே வீரமான விளையாட்டாக சொல்லிக்கொண்டான். இதே மதுரைப் பக்கமாக இருந்தால் சல்லிக்கட்டு என்று சொல்லியிருப்பானாக இருக்கும்.

சல்லிக்கட்டு, இன்று பலவாறான பரபரப்புகளை பரப்பிக்கொண்டிருக்கிறது இணையத்தில். இது தான் தமிழன் வீரமென்றும், பண்டைய தமிழர்களுக்கான விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. அப்படியா? முதல்வன் படத்தில் சம்பந்தமேயில்லாமல் "எங்க ஜாதி ஆளை அடிச்சி போயிருவானா?" என்று திடீரெனக் கூவும் போக்குவரத்து ஊழியர் மாதிரி , ஒரு சாதிக்காரர்கள் இது எங்கள் விளையாட்டு இதில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்று போராட்டம் வேறு. அப்ப மத்த சாதிக்காரனுக்கு அது வீரமில்லையா? இதில் மாடுகளைக் காப்பாற்ற வழக்குகள் வேறு. அடப்பாவிகளா, மாட்டு மேல பரிதாபப் பட்டுதான் வேணாம்ங்கிறீங்களா? மனுசனுக்கு அடிபடுமே அதைப் பத்தி கவலைப் படலையா? மாடு முட்டி சாவறானே அவனுக்கு இழப்பீடு என்ன கிடைத்துவிடும்? எந்த காப்பீடு திட்டமாவது இதற்காக இருக்கா? இருக்காது. ஏனெனில் இதற்கெல்லாம் காப்பீடு கிடைக்காது. அடிபடுறானே, அவனை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்வீர்கள்? உங்க ஒரு நாள் கூத்துக்கு செத்துப்போறவனுக்கும், கால், கை போறவனுக்கும் நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? மாட்டை கொடுமை படுத்துகிறார்கள் என்று போராடும் மக்களை விட்டுவிடுவோம். அவர்களுக்கு மாட்டுக்கறி விற்கும் கடைகளுக்கான முகவரி தெரியாமல் இருந்திருக்கும். வீரம் வீரம் அப்படின்னு சொல்லிட்டு செத்துப்போறவனுக்காக யார் போராடப்போறாங்க? விவேக் தெளிவாகவே ஒரு படத்தில் சல்லிக்கட்டை எதிர்த்து பேசியிருப்பார். மனுசன் தெரிஞ்சு தான் போராடுறான், அப்ப என்ன வேண்டுமென்றாலும் ஆகட்டும் என்பது எல்லாம் முட்டாள்தனத்தின் வெளிப்பாடு.

வீரமென்றால் அடுத்த வருடம் காளைகளை விட்டுவிட்டு சிங்கம், புலி போன்ற விலங்குகளை வீரம் என்ற பெயரில் அடக்கிக்கொள்ளுங்கள்.  மதுரை வட்டாரங்களைத் தவிர்த்து வேறு எங்கும் நடைபெறாத இந்த விளையாட்டை தமிழர்களின் பண்பாடு என்று பொதுமைப் படுத்தாதீர்கள்.

இன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்

சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)