அம்மாவின் சிறு குறிப்புக்கள்.. மேலும்..

  • தோலில் முள்முள்ளாக வரும் வறட்டு சொறிக்கு எலுமிச்சம்பழச் சாறு தேய்த்துக் குளிக்கலாம்.

  • உடம்பு அரிப்பு ஏற்பட்டு உடம்பு பூராகவும் திட்டு திட்டாக வந்தால், கொஞ்சம் புளித்த கெட்டி மோரில் 5, 6 செம்பருத்திப் பூக்களை பறித்துக் கரைத்து அரிக்கும் இடங்களில் தேய்த்தால் மாறிவிடும்.

  • பவழமல்லி பூக்களை கசக்கிப்பிழிந்து அந்தச்சாற்றை வெயிலில் காயவைத்தால் பவழமல்லி சாந்து கிடைக்கும்.

  • முகப்பருவை நீக்க சிறிதளவு சாதிக்காயை இழைத்து தினமும் பருக்களின் மீது தடவி வர, பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

  • துளசியை மென்று ஒரு பிடி தின்றால் தேள்கொட்டிய விடம் இறங்கிவிடும். கொட்டிய இடத்தில் துளசிச்சாறு தேய்க்கலாம்.

  • நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து மஞ்சள் காமாலைக்கு கொடுக்கலாம்.

  • பொன்னாங்காணிக்கீரையுடன் துவரம்பருப்பு நெய் சேர்த்து சாப்பிட உடல் பெருக்கும். துவரம்பருப்பு மிளகு சேர்த்த சமைத்து சாப்பிட வேண்டாத சதை நீங்கும்.

  • தேமலுக்கு இலுப்பை இலையை வேகவைத்து அரைத்துக் குளிக்கலாம்.